Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாள் சண்டைப் போட்டியில் செல்லப்பம் பட்டி அரசு பள்ளி சாம்பியன்

நவம்பர் 23, 2023 10:40

நாமக்கல்: மாவட்ட அளவிலான வாள் சண்டைப் போட்டியில், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

நாமக்கல் மாவட்ட அளவில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான, வாள் சண்டைப் போட்டிகள், பொம்மைக்குட்டைமேடு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி போட்டிகளை துவக்கி வைத்தார்.

2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் மற்றும் 120 மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சாம்பியன் பட்டம் வென்ற செல்லப்பம்பட்டி அரசு பள்ளிக்கு கோப்பையும் வழங்கப்பட்டன. 

காமராஜர் கல்வி நிறுவன இயக்குனர்கள் மகேஸ்வரன், முத்துராஜா, அல்லிமுத்து, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வாள் சண்டை பயிற்சியாளர் பிரபுகுமார், உடற்கல்வி இயக்குனர்கள் சரவணன், யுவராஜா, கமலஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்